மீண்டும் உச்சமடைந்த கொரோனா: நாட்டில் உள்ள 103 சீன பிரஜைகளுக்கு தொற்று உறுதி!

நோரோச்சோலை அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த 103 சீன பிரஜைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த குழு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று ஏற்பட்ட ஆறு கொரோனா இறப்புகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் இன்று 214 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *