நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுளளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 03 பெண்களும் அடங்குவதாகவும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது 5 இலட்சத்து 44 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 13,821 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15,280 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






