நாட்டில் கொரோனாவால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுளளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,841 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 6 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் 03 பெண்களும் அடங்குவதாகவும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது 5 இலட்சத்து 44 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 13,821 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15,280 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply