ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் சுமூக நிலையில்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் கடும் பனிப் போர் காரணமாக ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைகளை விதித்திருப்பதான் காரணமாக ஈரானினால் எதுவும் செய்ய முடியாத இக்காட்டான சூழல் காணப்பட்டு வந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பல தரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஈரான் அமெரிக்காவின் கட்டளைகளை நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட விரும்பிய போதிலும் ஈரானினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது நிபந்தனைகளுடன் அமெரிக்காவின் தலையீடு ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளையும் விலக்குவதற்கான ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிபந்தனைகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் எந்தளவிற்கு சாத்தியமானது என்பதுடன் எவ்வளவு காலம் வரை இதன் நீடிப்புத் தன்மை காணப்படும் என்ற கேள்விகள் சர்வதேசத்தின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *