மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்துடன் பேச் சுவார்த்தைகளில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் , தமிழ் மக்கள் சிறந்த பதிலை வழங்குவார்களென , மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார் .
யாழ் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே , அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது , சர்வகட்சி அரசாங்கம் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு காய் நகர்த்தலாகும்.
இந்தச் செயற்பாட்டின் முன்னோட்டமாக தமிழ்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் .
தமிழ் மக்கள் 74 வருடத்திற்கும் மேலாக அடக்குமுறைளுக்குள் அகப்பட்டு , எண் ணிலடங்காத துன்பங்களை அனுபவித்தனர் .
இந்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு , தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் காணப்படும் நிலையில் , மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி , எதையாவது அந்த மக்களுக்கு பெற்றுக் கொடுத்தால் நல்லதே . அவ்வாறில்லாமல் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்களானால் , அதற்கான முடிவுகளை அந்த மக்களே எடுக்க வேண்டும்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் பாராளுமன்றத்திற்குச் சென்ற ரணில் விக் கிரமசிங்க , பிரதமராகி , பின்னர் பதில் ஜனாதிபதியாகி , தற்போது ஜனாதிபதியாகியுள்ளார் .
ஏமது நாட்டில் நடந்த மக் களின் ஜனநாயகப் போராட்டம் , கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேறு மாறும் , பின்னர் ரணில் விக்ர மசிங்கவை வெளியேறுமாறும் கோரியே இடம்பெற்றது .
கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடிய நிலையில் , ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று செயற்படுகின்றார் . அவர் பதவிக்கு வந்த பின்னர் , ஜனநாயக வழியில் போராடிய தலைவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் .
அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி , ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்காக போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை . நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தைப் மக்களின் பாதுகாப்பதற்காகவே , மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர் .
ஆனால் தற்போது ஜனநாயகத்திற்காக போராடிய தலைவர்களை வீடு , வீடாகச் சென்று நள்ளிரவில் கைது செய்வதும் , அவர்களை மிரட்டும் வகையில் தேடுதல் நடத்துவதும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது .
தற்போது அரசாங்கம் இவ் வாறான அடக்குமறைகளைப் பிரயோகித்து , மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அடக்கி விடலாமென நினைக்குமானால் , அதுவொரு முட்டாள்தனமான முடிவாகவே அமையுமெனவும் , அவர் மேலும் தெரிவித்தார் .