
ஹம்பாந்தோட்டை,ஓக 10
ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து நான்கு பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக 19 ஆயிரம் லீற்றர் டீசல் தொகையை அம்பாறைக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.