அத்துகோரலவின் மோதிரங்களை திருடிய இருவர் கைது!

மே 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரக்கன்று அடங்கிய தங்க மோதிரம் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

அத்துடன், முன்னாள் உறுப்பினர் அணிந்திருந்த மேலும் இரண்டு தங்க மோதிரங்கள் மற்றும் மீகஹகிவுல உள்ளூராட்சி சபைத் தலைவரின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ ரன்பொகுணகம பிரதேசத்தில் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் திருடப்பட்ட கைத்தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 30 மற்றும் 38 வயதுடைய நிட்டம்புவ மற்றும் ரன்பொகுனுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் நேற்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *