குரங்கு பாக்ஸ் வைரஸ் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஜெர்மனியில் நான்கு வயது குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிக்கப்பபட்ட இருவருடன் வசித்துவந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கு காய்ச்சலின் பரவலை உறுதிப்படுத்தியது. ஜெர்மனியில் இதுவரை 2,900 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாதத்திலிருந்து ஐரோப்பாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நோய்ப்பரவல் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நிலைமையை கண்காணித்து வருவதாக ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் Robert Koch Institute(RKI) தெரிவித்துள்ளது. நோய்ப்பரவலைத் தடுக்க, தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்குவது முக்கியம் என்று கூறியது.
பிற செய்திகள்