
வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தலைவர் கா.அண்ணாமலை ஊடக சந்திப்பு நேற்றையதினம் யாழில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
தி.மு.க கண்ணதாசன் யாழில் நேற்றுமுன்தினம் PLOTE. கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு கச்சை தீவை தாருங்கள் உங்கள் பிரச்சினை தீரும் எனத் தெரிவித்திருந்தார். இவர் இங்கு வந்ததன் நோக்கம் என்ன? இல்லையெனில் அவரை இங்கு அழைத்த அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன ?
முதலில் கண்ணதாசனுக்கு கடலைப் பற்றி தெரியுமா?என்று யோசிக்க வேண்டும் கச்சதீவினை மீட்கிறோம் என்று கதை சொல்லிக்கொண்டு இங்கு வரக் கூடாது.நாட்டுக்கு எவ்வளவு தூர எல்லை என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் அரவணைப்பில் இலங்கை இருக்கிறது என்றால் ஏன் சீனாக்காரர்களை இங்கே குடியேற விட்டனீர்கள்? இப்பொழுது சீனக்கப்பல் வருவதைக்கண்டு எல்லோரும் கலங்கிப்போய் நிற்கிறீர்கள். அந்த கரையால அவர்கள் எடுக்கிறார்கள் இந்த கரையால நாங்கள் பிச்சு எடுப்போம் என்று இங்கே வந்து கூட்டத்தினை வைக்கிறீர்கள் .
எங்கள் அரசியல்வாதிகள் இவ்வாறான நபர்களை அழைத்து வந்து கூத்தடிக்காதீர்கள். அன்று மேடையில் நின்று ,உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள் அதனை கொண்டு சேர்க்கிறேன் என கூறியிருந்தார்.எங்களுக்கு என்ன நன்மை சேர்க்க போகீர்கள் ? எங்களுக்கு இருக்கிற ஒரு பிரச்சனை இந்திய இழுவைப்படகு இங்கு வரக்கூடாது இதை முதல் செய்து விட்டு வாருங்கள் .இந்த 30 வருட போராட்டம் நடந்த போது நீங்கள் உணவு தந்தா சாப்பிட்டோம் ?
சாப்பாடு இல்லாதவனுக்கு சாப்பாட்டைக் கொடுத்து கிட்னி பிடுங்கிற வேலை செய்யதீர்கள்.சிறிதளவேனும் உங்களுக்கு சூடு,சொரணை இருந்தால் விளங்கும் . பசியோடு இருப்பவனுக்கு உணவைக்கொடுத்து விட்டு கிண்ணியை பறிக்கிறது போல் அவனது வாழ்க்கையை இல்லாது செய்வது போன்று செய்கிறீர்கள்.
எங்களின் கடலில் நீங்கள்வேடிக்கை காட்டுறீர்கள் .பரம்பரை பரம்பரையாக நாங்கள் கச்சத்தீவில் தொழில் புரிகின்றோம். இப்பொழுது கச்சதீவினை தா என்று கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் .ஒரு நாட்டிற்கு 12 கிலோ மீற்றர் சர்வதேச எல்லை ,எனவே தூர எல்லையினை அளந்து உங்களுக்கு வந்தால் அதனை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் தமிழன் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கின்ற சாதி .எங்களுக்கு நன்மை செய்யா விட்டாலும் தீமை செய்து இருங்கள்.அரசி ,மாவினை தந்து விட்டு இவ்வாறு இங்கு வந்து சொல்லாதீர்கள் .எண்களின் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
உங்கள் ,உங்களின் அரசியலை நீங்களே வைத்திருங்கள் ,எங்கள் மீது திணிக்காதீர்கள் .பல உறவுகளை இழந்து ,இரத்தம் சிந்தி அனைத்தையும் முடித்து விட்டு கடலை நம்பி இருந்தால் அதற்கு கூட நீங்கள் விடுகிறீர்கள் இல்லை .உங்களுக்கு உழைத்து சாப்பிட தெரிவியவில்லையா ?
கச்சதீவினை உங்களுக்கு நிமிடம் என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரியும்.கரைவலையினை கூட இழுக்க அளவிற்கு முதலாளித்துவத்தை வைத்துக்கொண்டே நோண்டி தள்ளுகிறீர்கள் ,கச்சதீவினை உங்களுக்கு தந்தால் நாங்கள் கரையில் கூட இருக்க முடியாது . முதலில் வரைபடத்தை எடுத்து பாருங்கள்.கடலை பற்றி தெரிந்துகொண்டு கதையுங்கள் என்றார்.
பிற செய்திகள்