முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம்; போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களில் ஒருவரான அநுருத்த பண்டார தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தை புதிய பரிமாணத்திற்கொண்டு செல்லும் நோக்குடன், 2022 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியதுடன், அதுபற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்தில் மேலும் பலம் பொருந்தியதாக முழு இலங்கையர்களையும் ஒன்றுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என அநுருத்த பண்டாரவின் டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *