ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு!

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுவெல பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட் கற்சுரங்கப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *