
யாழ்ப்பாண நல்லூர் ஆலயத்தை அண்டிய பகுதியில் போலி 5 ஆயிரம் ரூபா நாணயத் தாளை பயன்படுத்தி பொருள் கொள்வனவில் ஈடுபட்ட நபர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.