கலாவெவ நாமல் உயன மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுற்றித்திரிந்த பரண யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (51622) ஜயசுந்தர ஹேரத் முதியசெல என்பவர் கடந்த 6 ஆம் திகதி கல்கிரியாகம வனஜீவராசிகள் அலுவலகத்தில் சரணடைந்த அஜித் குமார் ஜயசுந்தர என்ற சந்தேக நபரை விடுவித்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பரண யானையின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவகொடிட்டகே, யானையின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைக்கு சுமார் 30 வயது மற்றும் சுமார் ஒன்பது அடி உயரமுள்ள யானை என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவகோட்டகே உறுதிப்படுத்தினார்.
பிற செய்திகள்