நாட்டில் 66 MOH (மருத்துவ அலுவலகம்) பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீரிகம, வாதுவ, அக்மீமன, பலபிட்டிய, ஹபராதுவ, ஹம்பாந்தோட்டை, வெலிகம, குளியாபிட்டிய மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேசங்களில் டெங்கு தொடர்ந்தும் வேகமாக பரவி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையினால் டெங்கு நுளம்புகள் பெருகி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48,351 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 12,441 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
பிற செய்திகள்