
பதுளையில் இருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து பதுளைக்கும் உடரட மெனிகே மற்றும் பொடி மெனிகே ரயில்களை எட்டு நாட்களுக்குப் பின்னர் இயக்குவதற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறை (09) நடவடிக்கை எடுத்துள்ளது.
நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா புகையிரத நிலையம் வரையான உதர புகையிரத பாதையில் சுமார் 15 நிலையங்களில் மண் மேடுகள், கற்கள் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக புகையிரத பாதை பாரியளவில் சேதமடைந்துள்ளது.
புகையிரத பாதை புனரமைக்கப்படும் வரை, கடந்த (02) முதல் (09) வரை எட்டு நாட்களாக உதர புகையிரதத்தில் புகையிரதங்கள் இயங்கவில்லை. மேலும் (09) இயங்கிய உதர மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே புகையிரதங்கள் நண்பகல் 12 மணியளவில் ஹட்டன் புகையிரத நிலையத்தை வந்தடைந்தன.
மலையக ரயில் பாதையை புனரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் ரயில் நிலையம் வரை இயங்கும் அனைத்து ரயில்களும் (09) முதல் மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவுறுத்தியுள்ளது.
புகையிரதம் இயங்கும் அன்றைய தினம் (09) உதார மெனிக்கே மற்றும் பொடி மெனிகே ஆகிய புகையிரதங்களில் அதிகளவான மக்கள் பயணித்ததாகவும், மேலும் சில நாட்களுக்கு இரவு அஞ்சல் புகையிரதம் இயங்காது எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்