நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது கூட்டாளிகளும் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புவியியல் அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியின் புத்திசாலித்தனமற்ற செயற்பாடுகள் தற்போதைய நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், எரிவாயு, எரிபொருள் மற்றும் உரத் தட்டுப்பாடு உட்பட இந்த நெருக்கடியில் இலங்கை எவ்வாறு மூழ்கியது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
வரலாறு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக குடிமக்களுக்கு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்