ஜனாதிபதி ரணில் சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்ட யுக மனிதர்- பந்துல பராட்டு!

சர்வஜன வாக்கெடுப்பு அல்லது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளையும் சிறந்த தலைமைத்துவத்தையும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்ட யுக மனிதர் என்றும் அமைச்சர் கூறினார்.

தனது அரசியல் எதிர்காலம் பற்றியோ, வேறு எந்த விஷயத்தைப் பற்றியோ பேசாமல் சவாலை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாடு செல்லும் திசை மிகவும் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *