பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னொருவ பாலத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 துப்பாக்கி ரவைகளும் வெற்று துப்பாக்கி ஒன்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கபட்டு, பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய்யே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, மீட்கப்பட்ட ரவைகளுள் எம். 16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய 18 ரவைகளும் டி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய 7 ரவைகளும் எஸ்.எல்.ஆர் துப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய 5 ரவைகளும் எப்.என். ரைபிளுக்கு பயன்படுத்தக் கூடிய 3 ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த,சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்





