100 நாட்கள் செயல்முனைவின் 11ம்  நாள் போராட்டம் மூதூரில்!

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 11 ம் நாள் கவனயீர்ப்பு போராட்டம் நாளை  வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை  மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதாக வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தெரிவித்தார்.

இப் போராட்டத்தில் மூதூர்  பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள் , சிவில் அமைப்பினர் பெண்கள் அமைப்பினர், கிராமிய பெண்கள் குழுக்கள்,இளைஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் என பலர்  கலந்து கொள்ளவுள்ளர்.

இப்  போராட்டத்தில் கலந்து கொள்வோர் தங்களுக்கான சம  உரிமைகள்  கிடைக்கப் பெறவேண்டும், நாங்களும் இந்த நாட்டுப்  பிரஜைகள், ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்,பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அரசியல் தீர்வை நாங்கள் ஆவலுடன்  எதிர்பார்த்து நிற்கின்றோம், எங்களுக்கான அரசியல் தீர்வு  கிடைக்கும் வரை போராடுவோம், எங்கள் போராட்டமானது  அமைதியான போராட்டம் என தெரிவித்து பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பவுள்ளனர்.

11 ம் நாள் போராட்டமானது மூதூர் பொது விளையாட்டு மைதைனத்தில்  காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது என்பதனை தெரியத்தருவதுடன், இப்போராட்த்தினை வலுசேர்க்க அனைவரும் இணையுமாறு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா கேட்டுக் கொள்கின்றார். 

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *