
யாழ்ப்பாணம்-தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் பகுதியிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றிக்குள் நேற்று (09) மாலை நுழைந்த வன்முறைக் கும்பலொன்று நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.