
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பில் இருந்து பதுளைக்கு சொகுசு புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய ரயிலுக்கு “எல்லா ஒடெசி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 3.55 மணிக்கு பதுளையை சென்றடையும்.
மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையில் இருந்து காலை 09.50 மணிக்கு புறப்படும் புகையிரதம் இரவு 07.20 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
கம்பஹா, வயங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கன, பேராதனை, மஹன்வர, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, ரயில் பயணத்தின் போது சந்திக்கும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ரயில் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்