மடுமாதா பெருவிழாவையொட்டி விசேட பேருந்துச் சேவை!

மடுமாதா திருத்தலத்துக்கு விசேட பேருந்து சேவையை ஏற்பாடு செய்யவேண்டும் என்று இலங்கைப் போக்கு வரத்துச் சபையின் கோண்டாவில் பிரதான பிராந்திய முகாமையாளருக்கு பூநகரிப் பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது .

இது தொடர்பான கடிதமொன்றை இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளருக்கு பூநகரிப் பிரதேசசபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் நேற்றுமுன்தினம் அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மடுத் தேவாலயத்தின் பெருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது . எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்தத் திரு விழா நடைபெறவுள்ளது .

வலைப்பாடு . கிராஞ்சி , வேரவில் , முழங்காவில் , குமுழ முனை , ஜெயபுரம் , இரணைமாதாநகர் எனப் பூநகரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் இருந் தும் பல கிராமங்களில் இருந்தும் பல நுற்றுக்கணக்கான பக்தர்கள் மடுத்தேவாலயத்துக்கு வருடா வருடம் சென்று வருகின்றனர் .

ஆனால் இந்த வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள ளிபொருள் தட்டுப்பாடு , விலையேற்றம் . ஏனைய பொருள்களின் விலையேற்றங்கள் எனப் பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியால் மடுத்தேவாலயத்துக்கு மக்கள் சென்று வரவும் நேர்த்திகளை நிறைவேற்றவும் பல தடைகள் காணப்படுகின்றன .

எமது பிரதேசத்திலிருந்து மடுத் தேவாலயத்துக்குச் சென்று வருவதற்குத் தனியார் வாகனத்துக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது.

இதனால் பொருண்மியம் நலிந்த மக்கள் ஆலயத்துக்குச் சென்று தமது நேர்த்திகளை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர் .

இந்த நிலையில் பொதுப்போக்குவரத்து மூலமாக மக்கள் மடுத் தேவாலயத்துக்கு சென்று வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு உதவுமாறு பூநகரி தவிசாளர் உட் பட சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்ததாகக் கோருகின்றோம் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *