பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு நிலத்தைப் பண்படுத்த உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தால் வழங்கப்படவுள்ளது.
அதற்கு அமைய தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் நாளை வெள்ளிக்கிழமை(12) காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை வழங்கப்படவுள்ளது.
எனவே,தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களை வைத்துள்ள விவசாயிகள் தத்தமது கமக்கார அமைப்புகள் ஊடாக விவரங்களை வழங்குமாறு நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
க்யூ ஆர் கோட் அடிப்படையிலேயே இந்த டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்