அரகலய செயற்பாட்டாளர்களின் கைதுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது!

அரகலய செயற்பாட்டாளர்களின் வீணாண கைதுகளை வன்மைமாக கண்டிப்பதாக கிண்ணியா நகர உறுப்பினர் எம்.எம்.நசுருதீன் தெரிவித்தார்.

சபையின் 53ஆவது அமர்வு நேற்று (10) தவிசாளர் எம்.எம். நிவாஸ் தலைமையில் கூடியது. இதன் போது பிரேரனை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஆட்சியாளர்களின் ஊழல், மோசடி வீண்விரயம் என்பவற்றால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பொருட்களுக்கான விலையேற்றம், எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு பசி பட்டனி என்பவற்றால் தாக்கமடைந்த மக்கள் வீதிக்கி இறங்கி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக காலிமுகத்திடலில் அரகலய என்ற பெயரில் ஜனநாயக வழியில் போராடிய அனைத்து வகையான செயற்பாட்டாளர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கை யினை வண்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதியும் அரசாங்கமமும் அதி உச்சபட்ச சர்வாதிகார நடவடிக்கை யினை உடன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *