சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு புதிய வரி

கொழும்பு, ஓக 11

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கிவரும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் அரசாங்கம் விதித்துள்ள புதிய வரியால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

45 வீதமான வரி செலுத்த வேண்டி ஏற்பட்டால் தங்களது வியாபாரம் வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகையை குறைப்பது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அது குறித்து சட்ட ஆலோசனைகளையும் பெற்று வருவதாக பிரதான எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *