
இந்தியா தனது உள்ளூர்த் தயாரிப்பான டோர்னியர் உளவு விமானம் ஒன்றை இலங்கைப் படைகளுக்கு வழங்கவுள்ளது.
இதற்கான பேச்சு இடம்பெற்று வருவ தாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5 வருவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது.
பெரும்பாலும் இந்த விமானம் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தனது கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக இந்த உளவு விமானத்தைப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.