
யாழ்ப்பாணம்,ஓக 11
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற முயற்சித்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
எரிபொருளைப் பெற வரிசையில் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
QR குறியீடு கொடுக்கச் சென்றபோது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் வரிசையில் நிற்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய எஸ். ரூபன் என்ற நபரே உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.