நாட்டில் நிலவும் ,உர தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கும், மரக்கறிகளின் தொகை குறைந்தமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உரம் மற்றும் விவசாய இரசாயன பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபடுவதிலிருந்து விலகி உள்ளனர்.
இந்த நிலையில் தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விலைகள் அதிகரித்துள்ளன.






