
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 11 சிறுவர்கள் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை ஓரிரு வருகின்றனர்.அவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வைத்தியர தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.