உறவுகளை தொலைத்த தமிழ் மக்களின் போராட்டம் இன்றுடன் 2000 நாட்கள்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்றுடன் 2 ஆயிரம் நாட்களை கடக்கிறது.

இந்த நிலையில் உறவுகளைத் தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் , ஐக்கிய நாடுகள் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிட்டதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *