
திருமலை, ஓக 12
சட்டவிரோதமான முறையில் நாட்டின் கடல் எல்லைக்குள் உட்பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 9 மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில்; குறித்த மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தநிலையில்,அவர்களிடமிருந்து 2,137 கிலோகிராம் மீன் கடற்படையினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.