துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது

பன்னிப்பிட்டிய, ஓக 12

சிறியவகை துப்பாக்கியொன்றை தம்வசம் வைத்திருந்த பொலிஸ் முன்னாள் அதிகாரி ஒருவர் பன்னிப்பிட்டிய – மஹல்வராவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 61 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது, அவரிடமிருந்து 2 தோட்டாக்கள், 9 மில்லிமீட்டர் ரக 9 தோட்டாக்கள், போலி தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் சுகயீனம் காரணமாக 1990ம் ஆண்டு சேவையில் இருந்து விலகியதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *