
சீன ஆய்வுக் கப்பலொன்று இலங்கைக்கு விஜயம் செய்வதில் தொடர்பில் இந்தியாவின் உணர்வுகள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளை அங்கீகரித்து மதித்து செயற்படுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் தெரிவித்துள்ளதாக திங்கட்கிழமை இலங்கை உறுதிப்படுத்தியது.
சீனக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான கடல் படுக்கையை உளவுக்கப்பல் வரைபடமாக்கும். இதனால் கப்பலை ஹம்பாந்தோட்டையில் நிறுத்துவது குறித்து இந்தியா தனது பாதுகாப்புக் கவலைகளை தெரிவித்திருந்தது.
இந்தியாவின் கவலைகள் குறித்து கருத்து தெரிவித்த இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இந்தியாவின் அண்டை நாடு மற்றும் அதன் கொள்கையினால் இலங்கை அதிக நன்மைகளை அடைந்துள்ளதால், இந்தியாவின் கவலைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எந்தவித எதிர்பார்ப்புகளோ அல்லது நிபந்தனைகளோ இன்றி இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவி வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், IMF விவாதங்களின் போது இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இது எங்களுக்கு மிகவும் தேவையான நம்பகத்தன்மையை அளித்தது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
குறித்த இந்தப் பிரச்சினையில் இந்தியா கவலைப்படுவது நியாயமானது என்று தான் நம்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்