எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்களுடன் இருவர் கைது!

எம்பிலிப்பிடிய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் உடவளவ விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து ரி 56 துப்பாக்கி ஒரு மெகசின் துப்பாக்கி உட்பட, துப்பாக்கி தோட்டாக்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த, சந்தேக நபர்கள் மோதரவான மற்றும் பின்னவல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மீட்கப்பட்ட பொருட்களுடன் எம்பிலிப்பிடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *