யாழ் மாநகர சபையின் ‘யாழ்’ விருது திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு!

யாழ் மாநகர சபையின் ‘யாழ்’ விருது திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு!

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழு வழங்கி கௌரவிக்கின்ற யாழ் விருது இந்த ஆண்டு திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா நாளை(12) நாவலர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவ் விழாவில் வைத்து இவ் விருதும் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ‘ யாழ்’விருது வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *