
கொழும்பு, ஓக 12
நிழல் உலக தாதா மாகதுரே மதுஷுக்குப் பிறகு, டுபாயிலிருந்து இலங்கையில் பாதாள குழுக்களை வழிநடத்தினார் எனக் கூறப்படும் ‘ஹரக் கடா’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல கொலைகள் இவரின் வழிகாட்டலுடனேயே இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது மனைவியுடன் மலேசியாவிற்கு பயணித்த போதே கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.