திருகோணமலையில் யானையொன்று இறந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிப்பு!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சிறிமங்களபுர காட்டுப்பகுதியில் யானையொன்று இன்று (12) இறந்த நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு இறந்த நிலையில் காணப்படும் யானையானது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.

ஏனெனில் அவ் யானையின் உடம்பில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்தது போன்ற காயம் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

குறித்த இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை வருகைதந்து உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.

குறித்த, யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *