
கொழும்பு, ஓக 12
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் எழுச்சி
உருவான போது தப்பி ஓடியவர்கள் இப்போது நாங்கள் மீண்டும் வருவோம் என்று மக்களுக்கு சவால் விடுகின்றனர்.
மக்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை.
இன்னும் சிறிது காலத்தில் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதை மறந்து விட வேண்டாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (12)
வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக
நடைபெற்ற ஜனாதிபதியினால்
முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் உரையில் ஊழல் தொடர்பில் கடுமையாக எதனையும் கூறவில்லை. நாட்டில்
ஊழல் இருப்பதாக மக்களிடையே
கதைக்கப்படுவதாக மட்டுமே கூறியுள்ளார்.
அதேபோன்று பொய்களை சோடிக்க
வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இப்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மிகவும் பாரதூரமானது.
ஊழல் மிக்க ராஜபக்ஷர்களினாலும், அவரை சுற்றியிருந்த ஊழல் மிக்க அதிகாரிகளாலுமே நாடு இந்த
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.