
இலங்கை வாழ் மக்கள் முகம் கொடுத்துள்ள கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ,கடன் பிடியில் இருந்து மீட்பதற்கு இவற்றுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடந்த காலங்களில் ,மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து போராடிய மக்களையும் ,மக்களின் தலைவர்களையும் வேட்டையாடுகின்ற பாவித்தனமான நடவடிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இறங்கி இருக்கிறார்கள் என ஜே.வி.பி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
அதேவேளை காணி பிரச்சனைகள் ,அரசியல் கைதிகளின் பிரச்சனைகள்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்ச்ச்னைகள் என்பன தீர்க்கப்படவில்லை . அநீதிக்கு மாத்திரம் துணை போகின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற அரசாங்கமாக இந்த ரணில் அரசாங்கம் மாறியிருக்கின்றது.
இன்றைக்கு சர்வதேச அரசாங்கம் அமைப்பதற்கு எதுவும் கிடையாது,அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அமைச்சுப்பதவிகள்,பிரதமர் பதவி என பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள் .இதனை அமைத்துக்கொண்ட பின்னர் ஏனைய கடசிகளை அழைத்து சர்வதேச கட்சி ஒன்றை அமைத்து நாட்டு மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்போம் என்று கூறுகிறார்கள்.
இது மிகவும் வெட்ககேடான .கேலிக்கூத்தான செயற்பாடாகும் என்றால் அது மிகையாகாது
மக்கள் விடுதலை முன்னணியான நாங்கள் இந்த சர்வதேச கட்சி அமைப்பதில் கலந்துகொள்ளப்பபோவதில்லை ,அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சியான சஜித் கட்சியினரும் இதில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறுகிறார்கள்.
தற்போதைய பாராளுமன்றம் முன்னோக்கி செல்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அருகதையும் இல்லை ,உடனடியாக இந்த பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்குள் புதிய மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகின்றோம்.
இந்த ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி நுவெகொட நகரத்திலே மாபெரும் பொதுக்கூட்ட்டத்தினை நடாத்தி இதன் மூலமா இந்த அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகைகளை எடுப்பதற்காக தீர்மானித்திருக்கின்றோம் .
இதேபோன்று எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ,மக்கள் விடுதலை முன்னணி ,தேசிய மக்கள் சக்தி போன்ற பல்வேறு அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராடடத்தினை ,முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம் . மக்கள் இறையாண்மைக்காக புதிய மக்கள் ஆணைக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொள்வதற்காக எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் .என்றார்.
பிற செய்திகள்