நாட்டில் மீண்டும் ராஜபக்சாக்களின் ஆட்சி மலரும் – ரோஹித்த எம்.பி

ராஜபக்சவினர் மீண்டும் எழுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று கூறுகின்றனர். தற்போது ராஜபக்சவினர் இல்லை. மகிந்த ராஜபக்ச தற்போது நாடாளுமன்ற உறுப்பினர். பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். இரவு 2, 3 மணிக்கு ராஜபக்சவினரை கனவில் கண்டு விழித்து பயப்படுவார்கள் என நினைக்கின்றேன் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *