மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா மவுசாகல தோட்டத்தில் பணியில் ஈடுபட்டு வந்த ஆண் தொழிலாளர்கள், பணியை முடித்து வீடு திரும்பும் வழியில், குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
அத்துடன் ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்களாவர்.
பிற செய்திகள்