சீனாவின் கருத்துக்களை இந்தியா நிராகரித்தது!

சீனாவின் புலனாய்வு கப்பல் தொடர்பில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் சீனா முன்வைத்திருந்த கருத்துக்களை இந்தியா நிராகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹரிந்தம் பாக்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் வருகை விவேகமாகவும் நேர்மையாகவும் பார்க்குமாறும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வழமையான கொடுக்கல் வாங்கல்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கேட்டு கொள்வதாக சீனா இந்தியாவின் பெயரை நேரடியாக சொல்லாமல் குறிப்பிட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிடுவதை தடுக்கும் வகையில் எந்த அறிக்கைகளையும் இந்தியா வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த கப்பல் தற்போது ஹம்தொட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் பயணித்து கொண்டிருப்பதாக செய்மதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நேற்று பிற்பகல் வேளையில் மணிக்கு 15.2 கடல் மைல் வேகத்தில் பயணித்து கொண்டிருந்த அந்த கப்பல் தற்போது மணிக்கு 5 கடல் மைல் வேகத்துக்கு குறைத்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *