இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை!

இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நாட்களில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இருப்பினும், இது டிசம்பரில் செய்யப்பட வேண்டும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *