இலங்கை தமிழர்கள் நால்வர் இந்தியாவில் தஞ்சம்!

மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திருகோணமலையை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் கடற்கரையில் சென்று இறங்கியுள்ளனர்.

பின்னர், அவர்கள் தாங்களாக முச்சக்கரவண்டி மூலம் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *