இந்திய கடற்படையின் கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கிவைப்பு!

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்திய அரசு அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது.

புதிய விமானம் தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஆரம்ப இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தை இலவசமாக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில் புதிய டோனியர்-228 கடல் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

மற்றொரு புதிய விமானம் இலங்கை அரசாங்கத்தால் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியாவால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டோனியர்-228 என்பது டர்போபிராப் இரட்டை-இயந்திரம் கொண்ட பல்நோக்கு இலகுரக போக்குவரத்து விமானமாகும், இது குறுகிய ஓடுபாதைகளில் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் சிறப்புத் திறன் கொண்டது.
இது 1981 முதல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது.

இவற்றில் சுமார் 245 விமானங்கள் 1981-1998 காலகட்டத்தில் ஜெர்மனியின் டோனியர் ஜிஎம்பிஹெச் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன, பின்னர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இந்த விமானங்களை டோனியர் ஜிஎம்பிஹெச் உரிமத்தின் கீழ் 1993 முதல் தயாரித்தது.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி டொனியர்-228 ரகத்தின் முதலாவது விமானம் இலங்கை விமானப்படையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *