கோழி இறைச்சி, முட்டையின் விலை மேலும் அதிகரிக்ககூடும்

கொழும்பு,ஓக 13

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இத்தொழிலை நடத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.
சில சமயங்களில் முட்டையின் விலை 70 ரூபா அல்லது அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என சங்கம் கூறுகிறது.

இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதியில், 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விலங்கு தீவனங்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கோழிப் பண்ணையாளர்கள், தீவனங்களை பெற்றுக்கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை உயர்வடைந்துள்ளமைக்கு இதுவே காரணமாகும்.

இவ்வாறான நிலையில், இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர், விலங்கு தீவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *