
திருகோணமலை,ஓக 13
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் படகு மூலம் வெள்ளி்கிழமை அதிகாலை இந்தியாவின் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்ற நால்வரில் 3 பெண்களும் ஒரு ஆணும் அடங்குகின்றனர். தமிழகம் சென்றவர்களிடம் கரையோர பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.