கடந்த ஒரு வருடத்திற்கு மேல் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பிரியந்த லியனகே அவர்கள் கொழும்பு தலைமையாக குற்றத்தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கடமையாற்றிய பிரியந்த லியனகே அவர்கள் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் ஊழல் குற்றச்சாட்டுகள், பொதுமக்களுக்கு சரியான முறையில் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்தல் ,பொலிஸ் நிலையங்களுக்கு சென்றும் சரியான தீர்வு கிடைக்கப்பெறாத சந்தர்ப்பங்களை உடனடியாக ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுத்திருந்தார்.
உயர் அதிகாரியாக இருந்தாலும் மக்களுடன் சிநேகபூர்மாக இறங்கிப் பழகும் தன்மையினையும் கொண்டிருந்தார். விசேடமாக அவர் பொலிஸ் நிலையங்களுக்குள் முன்னறிவிப்பு எதுவும் இன்றி நேரடியாக சென்று கள நிலைமைகளையும் ஆராய்ந்து இருந்தார். அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமது பிரசன்னா அவர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய திடீர் கள விஜயதினையும் மேற்கொண்டு இருந்து ஆராய்ந்து இருந்தார். அதற்கான உரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தார்
குறிப்பாக அவர் , பொதுமக்கள் நேரடியாக தமது காரியாலயத்திற்கு வந்து முறைப்பாடு செய்வதற்கான வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
அத்துடன் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் பெறுதல் பொதுமக்களுக்கான தீர்வினை சரியான முறையில் பெற்றுக் கொடுக்கத் தவறுதல், அதிகார துஸ்பிரயோகம் , முறைகேடுகள் ,இலஞ்ச ஊழல் , சமூக விரோத செயற்பாடுகளை , பிரதேசத்தில் இருக்கும் ஊடகவியல்கள் மூலம் அறிந்து கொண்டு அவற்றுக்கான நடவடிக்கைகளை, எடுத்திருந்தார்.
தனக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து பொதுமக்கள் தொடர்பான பிரச்சனைகளை அறிந்து கொள்வதை விடுத்து, அவர் ஊடகவியலாளர்களுடன் நற்பினை பேணி சகஜமாக பழகி, பொலிஸ் உத்தியோதர்கள் ளை தொடர்பில் தெரிந்து கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கடந்த காலங்களில் பொதுமக்கள் வழங்கிய பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய அவர்கள் அதிகாரத்தில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு இனம் காணப்பட்டு அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவர் கடமை ஆற்றிய காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத குழுக்கள் முற்றாக இனம் காணப்பட்டு அக் குழுக்களுக்கு எதிராக அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்