அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு..!

அ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தரப்பினர் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்கள் கடந்த வாரம் முடிந்தநிலையில், நீதிபதி தீர்ப்பினை திகதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை தீர்ப்பை அறிவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *