சட்டப்படிதான் ரணில் ஜனாதிபதியானார்– மனோ!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் ‘பேஸ்புக்’ பதிவு வருமாறு,

சட்டம் என்பது வேறு. விருப்பம் என்பது வேறு. இதில் தெளிவு இல்லாமல் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள கூடாது.

இந்நிலையில்,கோத்தாபய ராஜபக்ச என்ற முன்னாள் ஜனாதிபதிக்கு சட்டப்படி உரிமைகள் உண்டு.
அதிகாரபூர்வ வாசஸ்தலம், மாதாந்த கொடுப்பனவு, வாகனங்கள், பாதுகாவலர்கள் பெற அவருக்கு உரிமை உண்டு.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் இறந்து போனால் அவர்களது துணைவர்களுக்கும், இந்த வரப்பிரசாதங்கள் உண்டு.

இப்போது, சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால மற்றும் ஹேமா பிரேமதாச ஆகியோருக்கும் இந்த சட்டப்படி வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் விசேட அமைச்சரவை பத்திரம் மூலம் இரா. சம்பந்தனுக்கு வாசஸ்தலம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே இலங்கை திரும்பி வரும் கோதாபயவுக்கு வீடு, வாகனங்கள், கொடுப்பனவு, பாதுகாப்பு வழங்கப்படும்.

அதேபோல், ரணில் மீது நாட்டு மக்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி அவரது ஜனாதிபதி பதவியை சிலர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். இதுவும் பிழை. நாட்டின் சட்டப்படிதான் ரணில் ஜனாதிபதி ஆகியுள்ளார்.

மேலும், ரணிலையும், கோதாவையும் அரசியல்ரீதியாக பிடிக்காதவர்கள் இவர்களைஅரசியல்ரீதியாகத்தான் எதிர்க்க வேண்டும். ஆட்சியை பிடித்து இந்த சட்டங்களை மாற்ற வேண்டும்.
மாறாக “அவருக்கு வீடு கொடுக்காதே! வரப்பிரசாதம் கொடுக்காதே” என சப்தம் போடுவதில் பெரும்பயன் இல்லை.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *