நாளை வெடிக்கவுள்ள மாணவர் போராட்டம்!

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் நாளைய தினம் (18) கொழும்பில் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதங்களில் பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்த உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *